Posts

Showing posts from March, 2025

ஈகை அளிப்போம்!

Image
பொருள் ஈட்டுவதற்கு அனைவரும் ஒவ்வொருவிதமான தொழிலைச் செய்கின்றோம். கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை நமது தேவைகளைக்கு ஏற்ப செலவு செய்கின்றோம். செலவு செய்யும் முறையில் அனைவருக்கும் வேறுபாடுகள் ஏராளமாக உண்டு. சிலர் மிகவும் தாராளமாக செலவு செய்வார்கள், சிலர் மிகவும் குறைவாக செலவு செய்வார்கள். அது அவரவர்களின் விருப்பம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அடிப்படை செலவுகள் என்பது யாரும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த அடிப்படை செலவுகளில் ஒருப்பகுதி அறம் சார்ந்த காரியங்களுக்கு செலவிடுவது மிக அவசியம். அறம் சார்ந்த காரியங்களுக்கு மிகப் பெரிய தொகையை செலவிட நேரிடும் என்று நாம் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். நமது வருமானத்திற்கு ஏற்ப மிகச் சிறிய தொகையையாவது அத்தகைய நற்செயல்களுக்கு ஒதுக்க வேண்டும். ஈகை குணத்திற்கு தொகை அவசியமில்லை, மனமே அவசியம். அத்தகைய நற்செயல்களுக்கு அளிப்பது 'செலவு' கிடையாது. அவை 'ஈகை' ஆகும்.   "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை; வைத்திழக்கும் வன்கண் அவர்" என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதாவது, தாம் ஈட்டியப் பொருளைக் காப்பாற்றி வைத்து, அதைப்...

நமக்கு நாமே!

Image
மனதைக் காட்டிலும் ஒருவருக்கு சிறந்த நண்பரும் இல்லை, சிறந்த எதிரியும் இல்லை. மனதில் தோன்ற கூடிய எண்ணங்களே அனைத்து விதமான செயல்களுக்கும் காரணமாக அமைகிறது. நாம் செய்யக்கூடிய எந்தவித செயல்களும் தன்னிச்சையாக அமைந்தது என்று கூறிவிட முடியாது. திடீரென்று ஒரு செயலைச் செய்தாலும், என்றோ ஒருநாள், அதற்கான எண்ணம் நமக்குள் தோன்றியிருக்கும். அத்தகைய எண்ணத்தின் வெளிப்பாடே நமது செயல்கள் ஆகும். தெரியாமல் செய்த பிழைகள் என்று ஒன்றும் இருக்க முடியாது. அதைச் செய்த நேரம் வேண்டுமானால் தற்செயலாக நடந்து இருக்கலாம், பிழைகள் தற்செயலாக நடந்திருக்க முடியாது. முன்பு ஒருநாள் அச்செயல் குறித்த எண்ணம் மனதில் தோன்றியிருக்கும். அன்றே, இந்த எண்ணம் நமக்கு தேவையற்றது என்று விலக்கி இருந்தோமேயானால், பின்பு திடீரென்று அச்செயலைச் செய்வதற்கான வாய்ப்புகள் வந்திருக்காது. நேர்மறையான எண்ணங்கள் வரும்போது, அதை ஊக்குவிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் வரும்போது, துளிர்விடும்போதே அதை கிள்ளி எறிதல் வேண்டும். அவ்வாறு, நமது எண்ணங்களைத் தூய்மைப் படுத்த சான்றோர்களுடன் சேர்ந்து இருப்பதே சிறந்த வழியாக அமையும். "மனதை மீறி நடக்கும் குற்றம்...

சான்றோர்களின் சார்பு!

Image
மனம் போன போக்கில் வாழ்ந்து விடுவது அல்ல வாழ்க்கை. ஒவ்வொரு செயலிலும் நல்லது எது, தீயது எது, என்று ஆராய்ந்து முன்னெடுப்பதே சிறந்த வாழ்வாக அமையும். எதன் அடிப்படையில் ஒவ்வொரு செயலையும் நாம் ஆராய முடியும்? நமக்கு தோன்றுவதனால் ஒரு செயல் நல்லதாகவும் தீயதாகவும் ஆகி விடாது. நமக்கு தோன்றும் எண்ணங்கள், நம்முள் கட்டமைக்கப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகளின் வெளிப்பாடு. அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்குமா என்பது சந்தேகமே! அது முழுவதுமாக நல்லதாகவும் இருக்காது, முழுவதுமாக தீயதாகவும் இருக்காது. இந்த இடத்தில் தான் நாம் சற்று தெளிவோடு இருப்பது அவசியமாகிறது. இத்தகைய சமயங்களில், நாம் முற்றும் அறிந்த சான்றோர்களை அணுகி, அவர்களை வணங்கி ஆலோசனை பெறுதல் அவசியமாகிறது.   தத் வித்தி ப்ரணிபதேன பரிப்ரஶ்நேந ஸேவாயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம்  ஞானினஸ்தத்வ-தர்ஷினா  (ஸ்ரீ பகவத் கீதா 4.34) பகவான் கிருஷ்ணர், கீதையின் நான்காவது அத்யாயத்தில் , " உண்மையான ஞானத்தை முற்றும் அறிந்த ஞானிகளிடமிருந்து பெறவேண்டும். அத்தகைய குருவை வணங்கி, அவர்களுக்கு சேவை செய்து, மனதில் வஞ்சகமில்லாமல் அவர்களிடம் சந்தேகங்களை...

கபடமில்லா கல்வி!

Image
கல்வி என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமே ஆகாது. படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் புத்தகத்தைப் படித்துவிடலாம். அவர்களுக்குப் புத்தக அறிவானது நிச்சயமாக ஏற்பட்டுவிடும். புத்தகங்களைப் படிப்பது ஒரு தகவல் பரிமாற்றம் என்ற அளவில் நின்றுவிடும். அத்தகைய புத்தகங்களை எவ்வாறு படித்திருக்கின்றோம், கல்வியை எவ்வாறு கற்றிருக்கின்றோம் என்ற பலன்கள் நடத்தையில் தான் வெளிப்படும். "கற்க கசடற கற்பவை கற்றபின்; நிற்க அதற்குத் தக" என்ற குறள் நாம் அனைவரும் அறிந்ததே. கற்பது பெரிது அல்ல, தீயவற்றை நீக்கி, நல்லவற்றைக் கற்பது தான் உயர்ந்தது. கற்றதை வெறும் அறிவாக வைத்துக் கொள்ளாமல், அதனை நடைமுறையில் கொண்டு வந்து நடந்து காட்டுவது தான் சிறந்தது.  நடத்தை என்பது யாது? பேசும் விதம், அனைவரிடமும் பழகும் விதம், சுயநலம் இல்லாமை, பொறுமை, அரவணைப்பு, ஒருத்தர் ஏதேனும் பேசும்போது அவரை கூர்ந்து கவனித்தல், தவறு நடைபெற்றால் துணிவுடன் அதை எதிர்த்தல் , ஆகிய பல விதமான விழுமியங்களே நமது நடத்தையை தீர்மானிக்கின்றன. நாம் இத்தகைய நடத்தைகளை வெளிப்படுத்த நாமாக ஏதும் முயற்சிகள் எடுக்க வேண்டாம். நாம் கற்கும் கல்வியை சரியாக கற்றோமேயானால், இ...

நீடிக்கும் நட்பு!

Image
தனி மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானவர்கள் அவர்களுடைய நண்பர்கள். மகாபாரதத்தில் இரண்டுவிதமான நட்புகளைக் காணலாம். ஒன்று, துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் இருந்த நட்பு. மற்றொன்று, அர்ஜுனனுக்கும் பகவான்  கண்ணனுக்கும் இருந்த நட்பு. முதல் நட்பில், தர்மம் அறிந்த கர்ணன் தீய நட்பினால் அதர்மத்தின் பக்கம் நின்று தன் தவ வாழ்வை இழந்தான். மனதளவில் வலிமையிழந்து காணப்பட்ட அர்ஜுனனுக்கோ கண்ணனுடைய நட்பானது மிகவும் கைகொடுத்து, வெற்றியடையச் செய்தது. உலகிற்கு கீதையென்ற உன்னதமான வழிகாட்டியும் கிடைத்தது. அத்தகைய நல்ல நட்பு கிடைத்தோர்கள் பாக்கியசாலிகளே. "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி; ஒல்லும்வாய் ஊன்றும் நிலை" என்கிறார் திருவள்ளுவர். அதாவது, மனவேறுபாடு இல்லாமல், அத்தகைய மனவேறுபாடுகள் இருந்தாலும் இயன்ற இடங்களிலெல்லாம் இணைந்துப் போகும் தன்மையுடைய நண்பர்களிடத்திலேயே நட்பானது நிலைத்து நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். மனவேறுபாடுகளின்றி செல்ல வழியாது. இருவர் ஒரு புள்ளியில் இணைவது என்பது இக்காலக்கட்டத்தில் மிகக் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட நேரத்தில், நட்புணர்வுடன் இருக்க, தனிப்பட்ட ...

நல்லதைத் தொடர்வோம்!

Image
'நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீயவற்றைச் செய்யாமல் இரு' என்ற வாக்கியம் அதிக முறை கேட்ட வாக்கியங்களில் ஒன்றாக இருக்கும். நாம் செய்யக்கூடிய நற்காரியங்கள் தடையில்லாமல் நடைபெற வேண்டும். நற்காரியங்கள் செய்யும்போது பலவித இன்னல்களும் இடர்பாடுகளும் வருவது இயல்பே. அத்தகைய சமயங்களில் மனம் துவண்டு நற்காரியங்கள் செய்வதிலிருந்து விலகிவிடலாம் என்ற சிந்தனை மனதில் எழும். அத்தகைய நேரங்களில் நல்லோர்களின் சேர்க்கை நமக்கு உறுதுணையாக இருக்கும். சாதுக்களோடு சேர்ந்து அத்தகைய இக்கட்டான சூழல்களில் பயணிக்கும்பொழுது, நமக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். நாமும் தொடர்ந்து அத்தகைய நற்காரியங்களைச் செய்வோம். நல்லது செய்வதை நிறுத்திவிட்டு தீயவற்றைச் செய்யாது அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். "நமக்கு எதற்கு இந்த வம்பு?" என்று எண்ணுகின்றனர். ஆனால், அவ்வாறு ஒருவரால் இருக்க முடியாது. ஏ தேனும் ஒரு காரியங்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பது தான் மனிதர்களின் இயல்பு . ஒரு காரியத்திலிருந்து விலகி, மற்றொரு காரியம் செய்யாமல் மனிதர்களால் இருக்க முடியாது. நல்லவற்றைச் செய்வதை நிறுத்தினால், அந்...

அன்பினால் காட்டுத்தீயை அழிப்போம்!

Image
'உலகம் ஒரு கிராமம்(Global Village)' என்ற ஒரு தத்துவம் தற்போது வளர்ந்து வரும் ஒன்றாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் பரிமாற்றத்தில் புரட்சி ஆகியவை மக்களிடம் தகவலைக் கொண்டு சேர்ப்பதில் விரைவாக செயல்படுகின்றன. எவ்வளவு தூரமாக இருந்தாலும் நிமிடங்களில் ஒருத்தரைத் தொடர்புக்கொண்டு எளிதில் பேசிவிடலாம். கிராமங்களில் ஒரு இல்லத்தில் ஏதேனும் நடந்தால், அந்த கிராமம் முழுவதும் அத்தகவல் வேகமாக பரவி விடுவது போல, தற்போதய வளர்ச்சிகள் அனைத்து தகவல்களையும் எளிமையாக பரப்பி விட்டுவிடுகின்றன. இதன் காரணமாகவே 'உலகம் ஒரு கிராமம்' என்று கூறப்படுகிறது.  இது நாணயத்தின் ஒரு பக்கமே.   நாம் பழகும் அனைவரிடமும் நமக்கு விருப்பு அல்லது வெறுப்பு உருவாகுகிறது. வெறுப்புணர்வு, அவர்கள் மீது கோள் சொல்ல தூண்டுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் பலரில் யாருக்காவது குறை கூறுவதைக் கேட்பதில் விருப்பம் இருக்குமானால், நாமும் அவர்களிடம் சென்று ஒருவர் மீது நாம் கண்ட குறைகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். அவ்வாறு பகிர்ந்து கொண்ட பின், மனதிலிருந்து பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்வோம். ஆனால், அவ்வாறு குறைகளைக் கேட்க வி...

எத்தகையவரும் நம்மவரே!

Image
ஏற்றமும் தாழ்வும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக உள்ளது. மேடு என்று ஒன்று இருந்தால், பள்ளம் என்று ஒன்று இருக்க தான் செய்யும். அதே சமயத்தில், அனைத்து பயணங்களும் பள்ளத்தில் மட்டுமே அமையாது. ஏற்றம் ஏற்பட்டு தான் ஆகும். சிலருக்கு பல்வேறு காரணங்களால், பள்ளத்தில் நீண்ட நாட்கள் பயணம் நிகழ்கிறது. அச்சமயங்களில், அத்தகையோருக்கு தாழ்ந்த மனப்பாண்மை, மனந்தளர்ச்சி ஆகியவை அழையா விருந்தாளியாக பயணத்தில் சேர்ந்து கொள்கின்றன. தன்னம்பிக்கை கொண்டு தங்களது பயணத்தை மேட்டில் ஏற்ற முயற்சிக்காதவர்களை இவ்வுலகம் தாழ்ந்தவராக அடையாளப் படுத்திவிடுகின்றது. சமூகத்தால் அவர்கள் நடத்தப்படும் விதமும் கவலைக்குறியதாக உள்ளது. முயற்சிகளும், மனதளவில் பலத்தையும் விட்டதனால், பல்வேறு தலைமுறைகள் ஆனாலும் அத்தகையவர்கள் மீள்வது கடினமாக உள்ளது. ஆனால், சாமானியர்கள் அத்தகைய மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதையே ஔவையார் இங்கு கூறியுள்ளார். பொருளாதாரம், சமூக நிலைமை, உடல் ஊனம், கல்வியறிவு போன்றவைகளால் ஒருவர் நொந்து போயிருந்தால், அவரிடம் நாம் கூடுதல் பணிவோடும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டுமாம். இவற்றால் தாழ்வு அடைந்திருப்பதன...

குற்றம் தவிர்ப்போம்!

Image
மனிதர்களின் மாண்புகள் பலவிதம். உண்மை, நேர்மை, நம்பிக்கை, பொறுமை, இரக்கம், வைராக்கியம் போன்றவை மனிதனுக்கு தேவையான ஆத்ம குணங்கள் என சென்ற பதிவுகளில் கண்டோம். குற்றம் கூறாமை என்பதும் ஒரு ஆத்ம குணமே. புலன்களே மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு முக்கியமான உள்ளீட்டைத் (Input) தருகின்றன. காதால் கேட்கப்படும் செய்திகளும், கண்ணால் பார்க்கப்படும் காட்சிகளும் எண்ணங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. இவ்வாறு ஒவ்வொருவர் மீதும் தோன்றும் எண்ணங்களே அவர்கள் மீதான விருப்பு வெறுப்பிற்கு காரணமாகின்றன. ஒருவர் செய்யும் செயலில் நமக்கு விருப்பும் இருக்கலாம், வெறுப்பும் இருக்கலாம். வெறுப்புகள் இருக்கும் சமயத்தில், குற்றம் கூற துவங்கிவிடுகிறோம். அத்தகைய குற்றம் ஒருவரிடத்தில் கண்ட பிறகும், அன்பாக நடந்து கொண்டு உரிய சமயத்தில் அவரிடம் அதைப்பற்றி எடுத்துக் கூறி அந்த குற்றத்தை சரி செய்பவர்களே மேன்மை உடையவர்கள். ஆனால், அனைவரிடமும் அத்தகைய மேன்மை எளிதில் வந்துவிடுவதில்லை. காரணம், குற்றமற்றவர்களுக்கே அத்தகைய மேலான குணம் அமைகிறது.  நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, அது சற்று கடினமான ஒன்று.  பிறரிடம் குற்றம் கண்ட பிறகும் ப...

தானமே தனம்!

Image
"தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்" என்ற பழமொழி நாம் அனைவரும் விரும்பி பயன்படுத்துவது ஆகும். இதனை அடிக்கடி சாமானிய மனிதர்களும் பேச்சுப்போக்கில் பின்பற்றுவதை நாம் கண்டிருப்போம். யாராவது ஒருத்தர் அதிகப்படியான தானம் செய்தால், அவருக்கு நாம் கூறும் முதல் அறிவுரையாக இந்த பழமொழியாக இருக்கும். தானமும் அறச் செயல்களும் நம்முடைய தேவைக்குப் போகப் பிறருக்கு செய்வது என்பதாக இதன் பொருளை நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், இதன் பொருள் வேறு. ஒருவர் செய்யும் தானமும் அறம் சார்ந்த செயல்களும் என்றென்றும் எந்நிலையிலும், செய்பவரை மிஞ்சி நிற்கும். அத்தகைய ஒருவர் மறைந்த பின்னும் அவர்செய்த தானமும் அறச்செயல்களும் அவரை உலகத்தாருக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். அவை அவரின் அடையாளமாக மாறி, அவருக்கு முன் அனைவருக்கும் அத்தகைய செயல்கள் தான் கண்ணில் படும். எனவே தானமும் அறச்கெயல்களும் தனிமனிதனைக் காட்டிலும் உயர்ந்ததாக இருப்பாதால், அது 'தனக்கு மிஞ்சியது' அல்ல 'தன்னையே மிஞ்சியது' என்று பொருள்கொள்ள வேண்டும் என்பார் என் குருநாதர். தானம் செய்ய தனம் முக்கியமல்ல, மனமே முக்கியம்! மழை பொழிவது கு...

மனோபலம்!

Image
இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அற்புத படைப்பே வாழ்க்கை. இன்ப காலத்தில் நாம் மிகுந்த பலத்துடன் இருப்பது போல் நமக்குள் ஒரு வலிமை பிறக்கும். மிகவும் மகிழ்வாக இருக்கும்போது எடுக்கப்படும் முடிவுகளிலும் சொல்லப்படும் வார்த்தைகளும் உணர்ச்சியால் வெளிப்பட்டவை. மகிழ்வான காலத்தில் தோன்றும் வலிமையானது நிரந்தரம் கிடையாது. அது பற்பல காரியங்களை செய்ய நம்மை ஊக்குவிக்கும். ஆனால், நிரந்தரமான வலிமை என்பது அன்றாடம் நமது செயல்களிலிருந்து வெளிப்படுவதே ஆகும். துன்ப காலங்களில் நமது மனம் மிகவும் பலவீனமாக இருக்கும். ஆனால், அத்தகைய காலத்தில் தான் மனதை பலமாக வைத்துக்கொள்ள வேண்டும். அச்சமயங்களில் மனம் தளர்ந்து விட்டோமேயானால், மீண்டு எழ சிரமமாக இருக்கும். புயல் காற்று வீசும்போது, புயல் சுழன்று சுழன்று அடிக்கும், ஆனால், அப்புயலின் மையப்பகுதியில்(The eye of the cyclone) ஆழ்ந்த அமைதி நிலவும். மையப்பகுதியை சுற்றி பலத்த சப்தத்துடன் வீசும் அந்த காற்றின் தாக்கம், புயலின் மையப்பகுதியை துளியளவும் பாதிக்காது. அதுபோல, நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களால் நமது மனம் வேற்றுமை அடையாமல் இருக்குமானால், அந்த மனத்தின் வலிமை அளவிட முடியாது...

குருவின் அவசியம்!

Image
வாழ்வின் நோக்கமே வெற்றியடைதல். வெற்றி என்பதற்கான வரையறை அனைவருக்கும் பொதுவானது கிடையாது. அதற்கான வரையறை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு வேளை உணவு கிடைப்பதே வெற்றியாக கருதுபவரும் இவ்வுலகத்தில் உண்டு. கோடி கோடியாக சம்பாதித்தாலும் இன்னும் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. இவ்விரு தரப்பினருக்குமே வழிகாட்டி என்பவர் இன்றியமையாத ஒருவராக உள்ளார். முதல் தரப்பினருக்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைத்தால், அவரது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வழிபிறக்கும். இரண்டாம் தரப்பினருக்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைத்தால், வாழ்வின் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.  மனித பிறப்பின் நோக்கமே வீடுபேறடைதல். "பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்; இறைவன் அடி சேராதார்" என்று திருவள்ளுவரும் இதனை தெளிவுப்பட கூறுகின்றார். உலக காரியங்களிலேயே நமக்கு ஒரு ஆசான் தேவைப்படும்பொழுது, இறைவனை அடைய ஒரு குரு இன்றியமையாதவராக உள்ளார். "குருவில்லாமல் வித்தை பாழ்" என்ற முதுமொழி குருவின் அவசியத்தை உணர்த்துகிறது. உலக அறிவால் ஒருவர் ஆசான் ஆகிவிடலாம். நம் வாழ்வின் நோக்கத்தை அடைய...

தற்பெருமை கூடாது!

Image
        ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு. அத்தகைய திறமைகள், அவர்களது கடின உழைப்பாலும் பயிற்சியாலும் அவர்களிடத்தில் வளர்ந்துள்ளது நிதர்சனமான உண்மை. அத்தகைய திறமைகள் ஒவ்வொருவரையும் வாழ்வில் மேன்மை அடையச் செய்யும். அத்தகைய திறமைகளால் ஒருவர் நிறைவடைந்து விடுவாரா? என்றால், இல்லை.          திறமையை வைத்து பெயரும் புகழும் செல்வமும் சம்பாதித்துக் கொள்ளலாம். தம்மிடம் உள்ள ஒரு தனித்திறமை ஒருவரை மேன்மை அடையச் செய்யும். அதே தருணத்தில், நாம் அதற்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்தோமேயானால், நம்மை அது ஆட்கொண்டுவிடும். அத்தகைய திறனை வளர்த்துக் கொள்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, அத்தகைய திறமைகளால் வரும் பற்பல புகழ் போன்ற பலனில் முக்கியத்துவம் அளித்தால், நாமே நம்மைப் பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்துவிடுவோம்.        அத்தகைய தற்புகழ்ச்சி, நாளடைவில் நமது ஆணவத்தைப் பெருக்கி விடும். திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட, நம்முடைய புகழை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்குவோம். பிறகு, முன்பெல்லாம் நம் திறமையைப் புகழ்ந்தோர், தற...

நிதானமே நிரந்தரம்!

Image
இன்றைய காலக்கட்டத்தில் உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. வேகமாக ஓடும் இவ்வுலகில், நாமும் அதன் வேகத்திற்கு ஈடுக்கொடுக்கும் வகையில் ஓட வேண்டும் என்ற எண்ணம் அனைவருள்ளும் இருக்கின்றது. வேகமாக ஓட வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றவர்கள், அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களுக்கு கை கொடுக்குமா என்று ஆராய்ந்து முடிவெடுக்க தவறிவிடுகின்றனர். உலகம் ஓடும் வேகத்தில் ஓடவில்லையெனில், உலகத்தார் தம்மை என்ன நினைப்பாரோ என்று எண்ணி, நாமும் ஆராயாது ஓட அரம்பித்துவிடுகின்றோம். சில நேரங்களில் அத்தகைய ஓட்டம் வெற்றியை கொடுக்கலாம், பலநேரங்களில் அதன் விளைவுகள் துயரத்தைத் தர நேரிடும். நமது வாழ்வில், பொறுமையாக, அமைதியாக, நிதானமாக இருக்க வேண்டிய சூழல்கள் பற்பல. ஒவ்வொரு முடிவும் எடுப்பதற்கு முன் நாம் இத்தகைய மனப்பாண்மையோடு தான் இருக்க வேண்டும். அத்தகைய முடிவுகளை எடுக்கும் முன் சான்றோர்களிடம் ஆராய்ந்து, அவர்களின் துணையோடு எடுப்பது சாலச் சிறந்தது. அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளும் செயல்களும் எண்ணிலடங்கா மேன்மையை நமக்குத் தரும். அது, நமது பக்குவத்தை வெளிப்படுத்தும். நாம் எடுத்த முடிவுகளிலும் செயல்களிலும் நமக்கு முதலி...

மூத்தோர் சொல்

Image
"மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்" என்கிறார் தமிழ் மூதாட்டி. மூத்தோர் என்பது வயதில் எனவும், சான்றோர்கள் எனவும், அறிவில் சிறந்தவர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அத்தகைய பெரியோர்கள் அவரவர் வாழ்வில் பல அனுபவங்களைப் பெற்றிருப்பர். வயதால் மூத்தோர் என்பதை விட குணத்தாலும் அறிவாலும் மேன்மை உடையவர்கள் என்பதே சாலச்சிறந்ததாக இருக்கும். வயதாலும் குணத்தாலும் அறிவாலும் நுண்ணறிவு பெற்று விளங்கக்கூடியோரின் துணை ஒருவரின் வாழ்வில் கிடைத்தற்கரிய செல்வம். திருவள்ளுவரும், "பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே; நல்லார் தொடர்கை விடல்" என்று திருக்குறளில் கூறுகின்றார். நல்லோரின் துணையையும் அவர் கூறும் அறிவுரைகளையும் கைவிடுவதனால் ஏற்படும் துயரமானது, பலவித பகைவர்களால் ஏற்படும் துயரத்தை விட கொடியதானதாகும் என்கிறார் வள்ளுவர். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்; கெடுப்பார் இலானுங் கெடும்" என்று மற்றொரு குறளில் கூறுகிறார். மன்னன் ஒருவன் தான் செய்யும் தவற்றைச் சீர்ப்படுத்த தனக்கு துணையாக சான்றோர் ஒருவரை வைத்துக்கொள்ளவில்லை எனில், அவனை அழிக்க பகைவனே இல்...

ஞானம்!

Image
உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. நமது பாரத திருநாட்டிற்கு உள்ள பெருமை வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது. நமது நாட்டில் எங்கு எடுத்தாலும் ஞானிகளுக்கு பஞ்சமே கிடையாது.  அறிவு என்பது புத்தகங்கள் மூலமாகவும், முறையான கல்வி மூலமாகவும் பெறப்படுவது. இதனைப் பயன்படுத்தும் விதத்தில் இது பயனளிக்கும். நன்மைக்கும் பயன்படும் தீமைக்கும் பயன்படும். இன்று நாம் காணும் அனைத்து வளர்ச்சிக்கும் மனித அறிவே காரணம். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசி, அந்நாட்டைப் பேரழிவிற்கு உள்ளாக்கியது அமெரிக்கா என்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவின் வெற்றிக்காக அணுகுண்டை ஜப்பான் நாட்டின் மீது உபயோகிக்கலாம் என்ற அறிவுரையை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டிற்கு புகழ்ப்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கினார். அந்த அணுகுண்டால் ஏற்ப்பட்ட விளைவை நாம் விவரிக்க வேண்டியது இல்லை. தன் தவற்றை உணர்ந்த ஐன்ஸ்டீன், "இத்தகைய மோசமான விளைவை இந்த அணுகுண்டு விளைவிக்கும் என்று உணர்ந்திருந்தால், இந்த யோசனையை அளித்திருக்க மாட்டேன்." என்று ஜனாதிபதிக்கு பிற்காலத்தில் தாம் எழு...

உருவம் உண்மையாகாது!

Image
உருவமோ வயதோ ஒருவரின் மேன்மயைக் உணர்த்துவதல்ல. திருக்குறளில், "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேருக்கு; அச்சாணி அன்னார் உடைத்து" என்கிறார் வள்ளுவர். பெரிய வீதிகளில் உருண்டு வரக்கூடிய தேருக்கு பலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது தேர் சக்கரத்தின் அச்சாணியே ஆகும். அந்த அச்சாணியின் அளவை வைத்து அதனை எளிதாக மதிப்பிடமுடியாது. அந்த அச்சாணி இல்லையெனில் அந்த தேர் கவிழ்ந்து பேராபத்து நிலவும். உருவத்தால் யாரும் சிறியவரல்ல. புறநானூற்றில், "ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், 'மூத்தோன் வருக' என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் ; வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே " என்று பாடுகிறார் பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற புலவர். அதாவது, ஒரே ஊரில் பலர் இருந்தாலும், வயதால் பெரியவரை அழைத்து யோசனைக் கேட்காமல், சிறியவனாக இருந்தாலும் அறிவு நிறைந்த ஒருவனை தான் அரசன் அழைப்பானாம், அவனது ஆலோசனைப்படியே அரசனும் செல்வானாம். சபையின் அனைத்து தரப்பு மக்கள் இருந்தாலும், கற்றவனுக்கே மதிப்பு அதிகமாம். அவனையே பேதம...

வெற்றிக்கனி!

Image

இல்லறத்தின் நல்லறம்

Image
விருந்தோம்பல் என்பது நம் நாட்டவரின் தலையாய பண்பு. திருவள்ளுவரும் விருந்தோம்புதலின் பெருமையைக் கூறும் போது, "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்; நல்வருந்து வானத் தவர்க்கு" என்று விருந்திடுவோரின் மேன்மையை தேவர்களுக்கு ஒப்பாக கூறுகிறார். அதாவது, வருவோருக்கு விருந்து அளித்துவிட்டு, மேலும் விருந்தளிக்க அன்பர்களை எதிர்நோக்கி இருப்பவர் தேவர்களுக்கு ஒப்பாவார் என்று கூறுகிறார். விருந்து என்பது அறுசுவை உணவிட்டு, தனது செல்வ செழிப்பை காண்பிப்பது அல்ல. விருந்தினராக வருவோர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒன்றை அவர்ளுக்கு தந்து, அன்போடு அவர்களை உபசரிப்பதே ஆகும். செல்வம் விருந்தோம்பலுக்கு தடையாகி விடக்கூடாது. அவரவர்களின் நிலைமைக்கேற்ப வருவோருக்கு அளிக்கப்படும் விருந்தில் அன்பையும் கலந்து அளித்தால் வருவோரும் மகிழ்வர்; தருவோரும் மகிழ்வர்.  விருந்திற்கு அளவும் ஆடம்பரமும் முக்கியமல்ல, அன்பும் அரவணைப்பும் தான் முக்கியம். இல்லறத்தில் இருப்போருக்கு அழகு 'விருந்திடுதல்' என்கிறார் தமிழ் மூதாட்டி. செல்வ செழிப்பு நிறைந்து இருந்து, வருவோரிடம் முக மலர்ச்சி இல்லாது உபசரிக்கவில்லை என்றால் அ...

கள்ளமில்லா மனம்!

Image
" வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான்" என்று பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. கொன்றைவேந்தனில் ஔவையார் சொல்லும் இந்த நீதியும் அதற்கு ஒத்துப் போவது போல் தோன்றலாம். ஆனால், அவ்வாறு கிடையாது. பேச்சு வழக்கில் கூறப்படும் இந்த சொற்றொடர் அறியாமையில் மக்களிடம் புழங்கும் ஒரு வரி.  இவ்விடத்தில் ஔவையார், தூய்மையான மனதை வெள்ளை நிறத்திற்கு ஒப்பாக கூறுகிறார். தூய்மை என்பது நமது சிந்தையிலும் செயலிலும் வெளிப்படும். நமது குணங்களையும் நல்ல பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று செயற்கையான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மல்லியின் நறுமணத்தை விளம்பரப் படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. மல்லியின் மணம் இயற்கையாக பரவும். நமது உள்ளம் எப்படியோ அப்படி தான் நமது செயல்களும். வெள்ளைக்கு கள்ளச் சிந்தையும் இல்லை, கள்ளச் சந்தையும் இல்லை. தூய்மையான உள்ளம் படைத்தவர்கள், தமது துன்ப காலங்களிலும், ஒருபோதும் குறுக்கு வழியிலோ கள்ள முயற்சியிலோ துன்பத்திலிருந்து விடுபட முன்வரமாட்டார்கள். கள்ள சிந்தனையற்று இருப்பவர்களிடம் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும். அது அவர்களைச் சுற்றி உள்ளவர்களிடமும் பற்றிக்கொள்ளும...

அமைதியே ஆயுதம்

Image
தமிழில் நீதி நூல்களின் எண்ணிக்கை ஏராளம். பள்ளிக்கூடங்களில் அதிகமாக கற்றுத்தரப்படும் நீதிப்பாடங்கள் பொதுவாக ஔவையாரின் நீதி நூல்களிலிருந்தே இருக்கும். அதிலும் கொன்றைவேந்தன் பொதுவாக அனைவராலும் அறியப்பட்டதாக இருக்கும். அடுத்த சில நாட்களுக்கு ஔவையின் நீதிகளைக் காண்போம்! "அமைதியாய் இரு" என்ற சொற்றொடர் நம் அனைவரின் செவிகளிலும் அவ்வப்போது விழும் ஒன்றாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் அமைதியாய் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அவ்வாறு அமைதியாய் இருக்க வேண்டுமெனில், நமது மனதானது மிகவும் பக்குவப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய பக்குவம் ஓரிரு நாட்களில் வருவது அல்ல. பொறுமையும் அமைதியும் ஒருவரிடத்தில் வந்துவிட்டால், அவர்களுக்கு எதிர்போக்கு கொண்டவர்கள் என்று யாரையும், எதையும் காண முடியாது.  அமைதியும் பொறுமையும் கோழைக்கான தகுதிகள் அல்ல. அவை இரண்டும் பலம்பொருந்தியவர்களிடமே நிலைபெறும். சினமும் அவசரமும் குறைந்த காலத்தில் ஒரு செயலை முடிவுறச் செய்யும். அமைதியும் பொறுமையும் காரியத்தை முடிக்க சற்று நேரமானாலும், அவ்வாறு முடிக்கப்பட்ட காரியத்தின் நோக்கமும் தாக்கமும் பயனும் அளவிட முடியாததான நன்மையை விளைவிக...

World moves on!

Image
No day of a man is complete without feeling and speaking about the people in and around. Just a talk about others will make us emotionally attached to them. Emotional attachment may either be positive or negative. Any sort of attachment will lead us to feel about the behavior, action, and character of whom we are emotionally attached to. The things that start as discussions will lead us to the emotional attachment which in a way results in sleepless nights loading our minds with innumerable thoughts. In Sri Bhagavad Gita, Bhagavan Sri Krishna says to Arjuna "Whatever happened, happened for the good. Whatever is happening, is happening for the good. Whatever will happen, will also happen for the good." Worrying about this world or ourselves will not make any revolutions in the world order or change in us respectively. The feeling of grief adds a burden to us in a way. Our grief will not stop the world from functioning. Time waits for none. We should always remember that our l...

Illuminated Minds!

Image
The mind has innumerable powers that can never be understood when wavering around. The mind is the very reason for everything that happens in this world. For every aspect of the developments either positively or negatively, the mind should get concentrated. You may be wondering how mind concentration is needed for negative actions. In Indian epics, Many would have come across negative characters such as Ravan, Hiranyakashibu, and many others. Though they are the villains of the story, their meditation with striving zealous made their minds more concentrated towards their actions. But, Nothing could benefit from such negative personalities concentrating their minds on negative actions. It is better to let the mind waver rather than concentrate on such destructive actions. Our success depends on the way we concentrate on our actions. When the mind gets focused and concentrated on good deeds, Our mind gets illuminated and lights up the dark way we had before getting concentrated . Illumin...

Self-excellence!

Image
Self-analysis and Self-aware make a man excel in his journey of life. Sitting idle for a couple of minutes comfortably without any possible distractions, analysing our day with an open mind, segregating positives and negatives that emerged from us that particular day, finding out the source of both the respective thoughts, fuelling up the source of positivity, and finding out the ways to weed out the source of negativity makes a man an excellent person in this world. No books, no mentors, and no influencers can make a man an excellent person unless a man thinks to make him an excellent. I am not ignoring the fact that the books, mentors and the influencers help in our way to enrich ourself but it is our own thoughts which make us excellent. Leaders take some time amidst their busy engagements to refuel themselves and reflect on themself. Hence, do not miss an opportunity to meet a wonderful leader.  Pranams to Swami Vivekananda for opening up the way to find an excellent person. ...